"அறிவியல் கண்காட்சியில்-அரசினர் உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்"
இன்று விழுப்புரம் வருவாய் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் Inspire விருதுக்கான அறிவியல்
கண்காட்சி கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அதில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகள்,
உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 200க்கும் அதிகமான பள்ளிகள் கலந்து கொண்டன. 30 முதல்
பரிசுகள்,30 இரண்டாம் பரிசுகள்,30 மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டு அவற்றில்
இருந்து மாவட்ட அளவிற்கான மூன்று பரிசுகள் தேர்வு செய்யப்பட்டு
வழங்கப்பட்டது........அதில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாதனையாளர்
பரிசு பெற்றது-அரசினர் உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம். மாணவர்களை கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர்
திருமதி தணமணி அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.என்.இராஜமாணிக்கம் அவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்கள்.இம் மாணவர்களை உருவாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் அவர்களுக்கு கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...