சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி:

சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி. புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்த பிளஸ்டூ வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி நேற்று 03-01-2015(சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் கலந்துகொண்டு முன்னிலை வகித்து பேசும்போது கூறியதாவது, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இக்கல்வியாண்டில் புதுக்கோட்டை மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும். நாங்கள் படித்த காலங்களில் எல்லாம் பிளஸ்டூ அரசு பொதுத்தேர்விற்கு ஒரு தேர்விற்கும்,மற்றொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்காது.
ஆனால் தற்போது உங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரசு பொதுத்தேர்வில் ஒரு தேர்விற்கும் மற்றொரு தேர்விற்கும் போதிய இடைவெளியினை அரசு அறிவித்து உங்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் அரசு உங்களுக்காக 14 வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த அரிய வாய்ப்பினை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையும், இந்த சுதர்சன் கல்வி நிறுவனமும், இணைந்து வழங்கிய சிறப்பு கையேடுகளை நன்றாக படித்து, படிப்பதோடு மட்டுமில்லாமல் நன்றாக எழுதிப்பார்த்து அரசு பொதுத்தேர்வினை நன்றாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மேற்படிப்புகளை தேர்வு செய்து உங்களின் எதிர்கால வாழ்க்கையினை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு சுதர்சன் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.கே.சுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு தலைமை வகித்து பேசும்போது கூறியதாவது, பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் மேற்படிப்பை தேர்ந்தெடுத்து படிக்காமல் உங்களது விருப்பத்தின்படி எதிர்கால மேற்படிப்பினை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். இக்கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்டூ அரசு பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 95 சதவீத தேர்ச்சி சதவீத இலக்கினை அடையும் ஆசிரியர்களுக்கு சுதர்சன் கல்வி நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தி கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் அமர்வு நீதிபதி திருமதி சி. கார்த்திகா அவர்கள் கலந்துகொண்டு பிளஸ்டூ வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அதற்கு பிறகு என்னென்ன மேற்படிப்புகள் படித்து அதன் மூலமாக அவர்களின் வாழ்க்கையினை வளப்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்தும், மாணவர்களாகிய நீங்கள் பெறும் வெற்றி தன்னம்பிக்கை, திட்டமிடுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, ஆகிய 5 கொள்கைகள் மூலமாக அடையலாம் என்பதைக்கூறி வெற்றி உங்களது கையிலேயே உள்ளது என்று பேசினார். அதனைத்தொடர்ந்து திருச்சி கனரா வங்கியின் மண்டலப்பொது மேலாளர் திரு ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பிளஸ்டூ வகுப்பு முடித்து மேற்படிப்புகள் மூலமாக வங்கியில் பெறும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர்களை கௌரவப்படுத்தி எங்கு என்ன படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதை பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு நன்றாக படித்து அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் முதன்மை இடத்தினை பெறவேண்டுகிறேன். மேலும் நீங்கள் பெறும் வெற்றி உங்களது கையில்தான் உள்ளதுஇவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்டூ மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து இயற்பியல் பாடத்திற்கு பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு வி.குமார், திரு ஜி.மாரிமுத்து, திரு ஏ.எல். முத்துக்குமார், திரு எம்.குழந்தைவேல், ஆகியோரும், கணக்கு பாடத்திற்கு பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு கே. கருப்பையா, திருமதி ஆர்.தமிழரசி, திரு கே.பாண்டியன், திருமதி பி.ஜெயலலிதா, ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இதேபோல வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு என்.முத்துராமன், திரு சி.பழனிவேலு, திருமதி எஸ்.சுசரிதா, திரு எஸ்.இளவரசு ஆகியோரும், உயிரியலில் தாவரவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாடவல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திருமதி ஏ.நாகம்மை, திரு என். திருமேனிநாதன் ஆகியோரும், உயிரியலில் விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது பற்றி பாட வல்லுனர்களான முதுகலை பாட ஆசிரியர்கள் திரு எஸ்.மோகன், திரு ஏ.ஜீவானந்தம், ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு அஜய் கே.சுந்தரம், திரு விஜய் கே.சுந்தரம்,முதல்வர் முனைவர் கே.கணேசன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் முனைவர் எம்.இராதகிருஷ்ணன், இயக்குநர் முனைவர் எஸ்.பழனி, அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) திரு ஆர். சண்முகம், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு சின்னப்பன். திரு சூசை, திரு திராவிடச்செல்வம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு போஸ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதே போல வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சி வருகிற 11ந்தேதியும் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. படவிளக்கம்1 சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ மாணவர்களுக்காக நடைபெற்ற வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பேசியபோது எடுத்தபடம்.படத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன், சுதர்சன் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.கே.சுந்தரம், தஞ்சாவூர் அமர்வு நீதிபதி திருமதி சி.கார்த்திகா, சுதர்சன் பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு அஜய் கே.சுந்தரம், திரு விஜய் கே.சுந்தரம்,மற்றும் பலர் உள்ளனர். படவிளக்கம்2சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் பிளஸ்டூ மாணவர்களுக்காக நடைபெற்ற வெற்றி உங்கள் கையில் நிகழ்ச்சியில் சுதர்சன் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.கே.சுந்தரம் தலைமைவகித்து பேசியபோது எடுத்தபடம். படத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் இ.ஆ.ப, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகன்,தஞ்சாவூர் அமர்வு நீதிபதி திருமதி சி.கார்த்திகா, சுதர்சன் பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு அஜய் கே.சுந்தரம், திரு விஜய் கே.சுந்தரம்,மற்றும் பலர் உள்ளனர். செய்தியாக்கம் கி.வேலுச்சாமி பி.எஸ்.சி, எம்.ஏ,எம்.ஏ, எம்.எட், உதவித்தலைமையாசிரியர், (புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செய்தித்தொடர்பாளர்) அரசு மேல்நிலைப்பள்ளி, இராப்பூசல்,இலுப்பூர்(தாலுகா), 622102.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H