ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அடுத்த நாளே சென்னையில் பயணிகள் குறை
தெரிவிக்கும் ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்பட்டது. தொடங்கிய 1 மணி நேரத்தில் 15
புகார்கள் வந்தன.‘ஹெல்ப்லைன்’பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு
ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் பயணிகளின் குறைகளையும்,
பிரச்சினைகளையும் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘138’ என்ற
அகில இந்திய அளவிலான ‘ஹெல்ப்லைன்’ வசதியை அறிவித்தார்.
பயணிகள் ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க ‘138’-க்கு டெலிபோன்
செய்யலாம் என்றும் அறிவித்தார். பட்ஜெட் அறிவிப்பு வெளியாகிய அடுத்த நாளே
நேற்று பகல் 2 மணிக்கு தெற்கு ரெயில்வேயில் இந்த ‘ஹெல்ப்லைன்’ வசதி
தொடங்கப்பட்டுவிட்டது. தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அலுவலகம்
அறையின் முதல் மாடியில் இதற்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.மின்னல் வேகத்தில் நடவடிக்கை
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்டு முறைகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ‘ஹெல்ப்லைன்’ பற்றி முறையாக பயணிகளுக்கு தெரிவிக்காத நிலையில் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் 15 புகார்களை பயணிகள் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சென்னை கோட்டத்தில் செயல்படுவதுபோல தெற்கு ரெயில்வேயின் மற்ற கோட்டங்களிலும் ‘138’ ‘ஹெல்ப்லைன்’ சேவை செயல்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...