தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னை தீவுத்திடலில் 41-வது இந்திய சுற்றுலா
மற்றும் தொழில் பொருட்காட்சியை கடந்த மாதம் 3-ந்தேதி முதல் தொடர்ந்து 70
நாட்கள் நடத்தி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக
பொருட்காட்சி வளாகத்தில் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளது. வரும் 28-ந்தேதி
மாறுவேட போட்டி, மார்ச் 1-ந்தேதி மெல்லிசை நிகழ்ச்சியும், வினா விடை
போட்டி, 6-ந்தேதி கிராமிய நடனம், 7-ந்தேதி புகைப்படம் எடுத்தல், 8-ந்தேதி
பரதநாட்டியம், 13-ந்தேதி ஓவியம் வரைதல், 14-ந்தேதி கோலப்போட்டி, அலங்கார
அணிவகுப்பு மற்றும் 15-ந்தேதி நகைச்சுவை போட்டி நடக்கிறது.போட்டியில்
பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பொருட்காட்சி நிர்வாகத்துக்கு நேரடியாகவோ
அல்லது ௴௴பீநீயீணீவீக்ஷீ@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற இணையதள முகவரியிலோ
தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்,
2-வது மற்றும் 3-வது பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும்
போது பள்ளி, கல்லூரி அடையாள அட்டை மற்றும் கல்வி நிறுவனங்கள் அளிக்கும்
கடிதம் கொண்டுவர வேண்டும். மேலும் தகவலுக்கு 044- 2536 1743 மற்றும் 044-
2538 5102 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.