எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மறுகூட்டலுக்கும், உடனடி
சிறப்புத்தேர்வுக்கும் 22–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க
27–ந்தேதி கடைசி நாள்.
மறு கூட்டல்
கடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு
பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மார்ச் மாதம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதி விடைத்தாள்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் 22–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை பள்ளி மாணவர்கள்
தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய
பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல் கட்டணம்
இருதாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் : ரூ.305–
(மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)
ஒருதாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும்: ரூ.205–
(கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்)
மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை
மறுகூட்டலுக்கான
கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்திலும்,
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த
வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச்
சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்
சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள்
மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு
கடந்த மார்ச் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாத,
வருகைப்புரியாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு உடனடித் துணைத் தேர்வு ஜூன்
மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி
மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள்
தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 22–ந்தேதி முதல் –27ந்தேதி வரை தேர்வுக்
கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்கென
தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக
ரூ.50– ஐ பள்ளியில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...