எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 92.15 சதவீத தேர்ச்சி: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 22 May 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 92.15 சதவீத தேர்ச்சி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி 92.15 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 1.15 சதவீத அதிக தேர்ச்சி ஆகும்.
92.15 சதவீத தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகளை சேர்ந்த 3,659 மாணவர்கள், 4,201 மாணவிகள் என 7,860 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியிருந்தார்கள்.

மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 3,253 மாணவர்கள், 3,990 மாணவிகள் என மொத்தம் 7,243 மாணவ–மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.15 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91 சதவீதம் மாணவ–மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.15 சதவீதம் அதிகம் ஆகும்.
முதல் 3 இடத்தில் மாணவிகள்
இதில் சென்னை மடுவாங்கரை பள்ளி மாணவி நிவேதிதா 491 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், சைதாப்பேட்டை பள்ளி மாணவி கவுசல்யா 490 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், பெரம்பூர் மார்க்கெட் பள்ளியை சேர்ந்த மாணவி ஜெயா 489 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
நிவேதிதாவின் தந்தை ஜெயக்குமார் தள்ளுவண்டியில் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கவுசல்யாவின் தந்தை தயாளன் ஆட்டோ டிரைவராகவும், ஜெயாவின் தந்தை மணிகண்டன் தனியார் வணிக வளாகத்தில் பாதுகாவலாளியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மாணவிகளின் விருப்பம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே முதல் இடம் பிடித்த மாணவி நிவேதிதா என்ஜினீயர் ஆகவும், 2–வது இடம் பிடித்த மாணவி கவுசல்யா டாக்டராகவும், 3–வது இடம் பிடித்த மாணவி ஜெயா பட்டய கணக்காளராகவும் (சி.ஏ.) வர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2012–ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவின்போது சென்னையில் 2 மாநகராட்சி பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன.
இது 2013–ம் ஆண்டு 12 பள்ளிகளாகவும், 2014–ம் ஆண்டு 17 பள்ளிகளாகவும் அதிகரித்திருந்தது. இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவ–மாணவிகள் 1,780 பேர் 400–க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 397 மாணவ–மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும், 375 பேர் 100–க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H