மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலும் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை ஆய்வு செய்ய மத்திய சுகாதார, குடும்ப
நலத் துறை இணைச் செயலாளர் தாய்த்ரி பாண்டா தலைமையில் புதுச்சேரி ஜிப்மர்
மருத்துவர் ஜெ.பாலச்சந்தர், மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறையின்
கட்டடக்கலை வல்லுநர் சச்சின் மகேந்துரு, மத்திய அரசின் சார்பு செயலர் எல்.
சந்திரசேகரன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் கடந்த 22ஆம் தேதி தமிழகம் வந்தனர்.
இந்தக் குழுவினர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை
மாவட்டம் தொப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, தஞ்சாவூர்
மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த
ஆய்வு அறிக்கையின்படி மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைக்க மத்திய அரசு
முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.