காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு ரூ. 50.15
கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டடப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்
காஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், பட்டுக்கோட்டை, திருக்குவளை,
அரியலூர், பண்ருட்டி, திருச்சி (பாரதிதாசன் பொறியியல் கல்லூரி),
ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 13 இடங்களில்
இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரத்தில் சென்னை - பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலை பொன்னேரிக்கரையில் இந்தக் கல்லூரிக்கென 10.56 ஏக்கர் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. கடந்த 2010- 2011-ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தக் கல்லூரி
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 857 மாணவர்கள் பயின்று
வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிக்கு முறையான கட்டட வசதி, ஆய்வக
வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாணவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்
கல்லூரிக்கென, தனிக் கட்டடம், மாணவ, மாணவிகளுக்கென விடுதி வசதி ஆகியன கட்ட
தமிழக அரசு ரூ. 50.15 கோடி நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல்
நாட்டி வைத்து கட்டடப் பணிகளை தொடக்கிவைத்தார். இந்தக் கட்டடப் பணி ஓரிரு
மாதங்களில் முடியும் தருவாயில் உள்ளது. வரும் கல்வி ஆண்டில் புதிய
கட்டடத்தில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து மாணவர்கள் கூறியது: அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி என்று ஆசையில் வந்தோம். ஆனால் போதிய வகுப்பறை, ஆய்வக வசதி இல்லாமல் இருந்தது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. வரும் கல்வி ஆண்டில் புதிய கட்டடத்தில் வகுப்பு நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. இப்போதுதான் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...