தகுதி: இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இளநிலை பொறியியல் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிப்பவர்கள் (எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ.) 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட் 2015) அல்லது பொறியியல் பட்டதாரி நுண்ணறிவுத் தேர்வில் (கேட் 2015) தகுதி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ. 500-க்கான வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். "செயலர், தமிழ்நாடு பொது சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் சென்னையில் செலுத்தத் தக்க வரைவோலையாக எடுக்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ. பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்தினால் போதுமானது.








