டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு: கலந்தாய்வு தேதி மற்றும் ரேங்க் பட்டியல் வெளியீடு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு: கலந்தாய்வு தேதி மற்றும் ரேங்க் பட்டியல் வெளியீடு:

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரின் மதிப்பெண்களையும் ரேங்கையும் எல்லோரும் பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முதல் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குரூப்-2 தேர்வு
நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு முதலில் முதல் நிலை தேர்வும், 2014-ம் வருடம் நவம்பர் மாதம் 8, 9 தேதிகளில் மெயின்தேர்வும் நடத்தப்பட்டது. அதில் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூலை 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
1136 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்காக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கு 2 ஆயிரத்து 222 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அனைவரது மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் முதலாக அறிமுகம்
இதுவரை தேர்வு எழுதிய பட்டதாரி ஒவ்வொருவரும் அவர்களின் பதிவு எண்ணை இணையதளத்தில்
( www.tnpsc.gov.in) பதிவு செய்தால் அவருக்கு அவரது மதிப்பெண் தெரியும். ஆனால் வெளிப்படைத்தன்மைக்காக 2 ஆயிரத்து 222 பட்டதாரிகளின் தரவரிசை பட்டியல் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை அனைவரும் பார்க்கும் வகையில் முதல் முதலாக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை முதல் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளோம்.

கலந்தாய்வு:
கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை நடக்க உள்ளது. 1,136 பணியிடங்களுக்கு 2222 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H