இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை www.akias.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி'யின் தலைவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி கூறியது:
இந்திய இஸ்லாமிய எழுத்தறிவு இயக்கம் (இல்மி) நடத்தும் "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.
இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.








