அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ்
கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக அரசு
தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், தனியார் நர்சரி
மற்றும் பிரைமரி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 'அரசு பள்ளியில் ஆங்கில
கல்வி சரியாகக் கிடைப்பதில்லை' என, பெரும்பாலான பெற்றோர் புகார்
கூறியுள்ளனர்.
இதையடுத்து, அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தனியார்
பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கிலம் கற்றுத் தர தேவையான நடவடிக்கை எடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பிரிட்டிஷ்
கவுன்சிலுடன் இணைந்து, ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும், 17ம்
தேதி முதல், பல கட்டங்களாக, வட்டார அளவில் இந்தப் பயிற்சி
அளிக்கப்படும்.'சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள், மாநிலம்
முழுவதும் சென்று, ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த உள்ளனர்' என, தொடக்க
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...