ஆக்கம் நன்றி Vijayalakshmi Raja..
இன்று பிள்ளைகளை ஏகமாய் பயமுறுத்தி கொண்டிருந்தேன்.ஒழுங்கா படிக்கலன்னா
9 வகுப்பிலேயே உட்கார வச்சிடுவேன்.10 க்கு போக முடியாது என்று.உடனே
விளைவை பார்க்க வேண்டுமே ! மேம் எங்கள் எல்லோரையும் pass பண்ணிடுஙக
மேம்.class பிரிக்காதீங்க மேம் என்று கோரிக்கை வந்தது.அப்ப நல்லா
படிச்சிடுஙக உங்கள் friends ஐ படிக்க சொல்லுங்க என்றேன்.உடனே
வகுப்பில் மிக பின் தங்கி இருக்கும் இரு மாணவர்களுக்கு பயிற்சி
ஆரம்பித்தது.எனக்கு சந்தோஷம்.ஆளுக்கு ஒரு புறம் சூழ்ந்து அமர்ந்து
இன்றைக்கே அவனை அரிசுட்டாட்டில் ஆக்கித் தீருவது என்று முடிவு செய்து விட்டது போல பயிற்சி!
இன்னொரு புறம் அறிவுச்செல்வன் இன்னொரு மாணவனுக்கு பயிற்சி
அளித்துக்கொண்டிருந்தான்.சுற்றி வந்து அறிவு கூட்டணியின் அருகே அமர்ந்தேன்.
இந்த பிள்ளைக்கு அடிப்படையில் dyslexic problem.y,g - b,d,- i,l- h,n -,g,q இவைகள் இவனுக்கு குழப்பம் தருவதாக இருக்கின்றன.
இதை அவனுக்கு ஒரே ஒரு வினாவுக்கான பதிலை கற்றுத்தர ஆரம்பித்த உடனே புரிந்துக்கொண்டான் அறிவுச்செல்வன்.உடனே அந்த எழுத்துக்களை அருகருகே எழுதி விளக்கினான்.பிறகு அந்த எழுத்துக்களை அந்த வினா விடையில் அடையாளம் காட்டி விளக்கினான்.
பிறகு அவனை கண்டுபிடிக்க சொன்னான். எனக்கு பெருமிதமாய் இருந்தது.
பெரும்பாலும் நன்றாக படிக்கும் பிள்ளைகளை கவனித்து அவர்களை நீ
மருத்துவம்,நீ பொறியியல், நீ ஆட்சியர்,நீ மென்பொருள் என்று இனம் பிரித்து
வழிகாட்டுவேன்.அதற்கான வழிமுறைகள், படிக்க வேண்டிய புத்தகங்கள் போன்றவற்றை
அறிவுறுத்துவது வழக்கம்.
ஆனால் அறிவுச்செல்வனை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவனை ஆசிரியராக செய்ய வேண்டும் என்ற உந்துதலே மேலோங்கும்.அவனுடைய ஆர்வமும்,தன் பணியில் அவனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் அருமை.
பிள்ளைகள் படிக்கவில்லையா? உடனே அவனுக்கு எங்கே புரியவில்லை? என்ன சிக்கல் என ஆராய்ந்து தன் கற்பித்தல் முறையை மாற்றி அமைத்து தன் பணியை சளைக்காமல் தொடர்வான்.
ஆசிரிப்பணியைப் பொறுத்தவரை இது மிக மிக அவசியம். வேறு வழியின்றி இந்த பணிக்கு வந்தவர்களால் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட முடியாது.விரைவில் சலித்து போய் விடும்.எனவே அர்ப்பணிப்பு உணர்வுடன்,இப்பணியின் மீது உள்ளார்ந்த நேசிப்பும்,புதுப்புது கற்பித்தல் முறைகளை கையாளும் ஆர்வமும் கொண்டவர்களே ஆசிரியப்பணிக்கு இப்போதைக்கும் ,எப்போதைக்குமான தேவை!
இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியப்பணிக்கு வழிநடத்துவது நல்ல ஆசிரியர்களது கடமை. இயந்திரங்களுடன் பணிபுரிய எல்லோராலும் முடியும்; குழந்தைகளுடன்.. ......?
ஆனால் அறிவுச்செல்வனை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவனை ஆசிரியராக செய்ய வேண்டும் என்ற உந்துதலே மேலோங்கும்.அவனுடைய ஆர்வமும்,தன் பணியில் அவனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் அருமை.
பிள்ளைகள் படிக்கவில்லையா? உடனே அவனுக்கு எங்கே புரியவில்லை? என்ன சிக்கல் என ஆராய்ந்து தன் கற்பித்தல் முறையை மாற்றி அமைத்து தன் பணியை சளைக்காமல் தொடர்வான்.
ஆசிரிப்பணியைப் பொறுத்தவரை இது மிக மிக அவசியம். வேறு வழியின்றி இந்த பணிக்கு வந்தவர்களால் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட முடியாது.விரைவில் சலித்து போய் விடும்.எனவே அர்ப்பணிப்பு உணர்வுடன்,இப்பணியின் மீது உள்ளார்ந்த நேசிப்பும்,புதுப்புது கற்பித்தல் முறைகளை கையாளும் ஆர்வமும் கொண்டவர்களே ஆசிரியப்பணிக்கு இப்போதைக்கும் ,எப்போதைக்குமான தேவை!
இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியப்பணிக்கு வழிநடத்துவது நல்ல ஆசிரியர்களது கடமை. இயந்திரங்களுடன் பணிபுரிய எல்லோராலும் முடியும்; குழந்தைகளுடன்.. ......?