உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதவீதம் இடங்களை பதவி
உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து
ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கோரி,
பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம் சார்பில்
மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி
எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு
விசாரித்தது. ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளதா என பதில் தர
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு சார்பில்
பதில் மனு தாக்கல் செய்யவில்லை.மாற்றுத் திறனாளிக்கு பதவி உயர்வு
வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல்
செய்யாததால், தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு வாரத்தில் அரசு பதில்
அளிக்க வேண்டும் எனஐகோர்ட் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். இந்த வழக்கில்
இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.