பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பிப்ரவரி 1 முதல் அதிரடி நடவடிக்கைரயிலில் மூத்த குடிமகன் சலுகைக்காக தவறான வயது குறிப்பிட்டால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு:

ரயிலில் மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணிப்பவர்கள் தவறான வயதை குறிப்பிட்டு பயணித்தால், பயணச்சீட்டு இன்றி பயணிப்பதாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கெடுபிடி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலாகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயிலில் பயணம் செய்ய தேசிய விருது பெற்ற விளையாட்டு வீரர்கள், நோயாளிகள், தேர்வு எழுதச் செல்லும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல் மூத்த குடிமகன்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமகன் என்ற சலுகையை பெற பெண்களுக்கு 58ம் , ஆண்களுக்கு 60ம் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணக்கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது.


நோயாளிகள் என்றால் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே கட்டணச்சலுகை. ஆனால் மூத்த குடிமகன்கள் எந்த காரணத்திற்காக பயணம் மேற்கொண்டாலும் இந்த கட்டண சலுகை உண்டு. அப்படி பயணம் செய்யபவர்கள் பயணச்சீட்டு வாங்கும் போதோ, முன்பதிவு செய்யும் போதோ வயது சான்று ஆவணங்கள் எதையும் காட்டத்தேவையில்லை. ஆனால் பயணத்தில்போது வயதை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய உண்மை சான்றை காட்ட வேண்டியது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை என 10 வகையான ஆவணங்களை வயது சான்றாக பயணத்தின் போது, கேட்கும் போது காட்ட வேண்டும்.

வயதுக்கான சான்று காட்டாவிட்டால், அவர்களுக்கு பயணச்சீட்டு பரிசோதகர் அபராதம் விதிப்பார். அதாவது மூத்த குடிமகன்கள் சலுகையாக பெற்ற கட்டணத்துடன், அபராதத் தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இனி மூத்த குடிமகன்கள் சலுகையின் கீழ் பயணம் செய்பவர்கள் வயதுச் சலுகைக்கான சான்ைற காட்டாவிட்டால், அதவாவது தவறான வயதை காட்டி சலுகை பெற்று பயணிப்பவர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருதப்படுபவர். அதுமட்டுமின்றி முன்பதிவு செய்து இருக்கை அல்லது படுக்கை உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் தவறான வயதைக்காட்டி சலுகை பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படி தவறான வயதைக் குறிப்பிட்டு சலுகை பயணம் மேற்கொள்பவர்கள் பிப்ரவரி 1ம் தேதி பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களாக கருத்தப்பட்டு அதற்கான அபராதம் விதிக்கப்படும். இதற்கான உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H