ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1.20 கோடி பேர் இன்னும்
ஆதார் எண்ணுக்கு பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60 சதவீதம் மாணவர்கள்
உள்ளதாக தெரியவந்தது. மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை மற்றும் உயர்நிலை
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் கொடுப்பதற்காக சிறப்பு
முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களை அலையவிடாமல் தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த கர்நாடக மாநில பொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர் கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளை ஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது- பெங்களூரில்








