Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நல்ல கல்விதான் நல்லவர்களாக வாழவைக்கும்: ஜயேந்திரர் ஆசியுரை:
மாணவர்களுக்கு நாம் அளிக்கும் நல்ல
கல்விதான் அவர்களை நல்லவர்களாக வாழவைக்கும் என்று, காஞ்சிபுரம் சங்கர
மடத்தின் மடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா
வித்யாலயா பல்கலைக்கழகம் சார்பில், விரைவில் நடைபெற இருக்கும் பிளஸ் 2
பொதுத் தேர்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்களுக்கு அருளாசி வழங்கும்
நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கிப் பேசியதாவது:
மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
அதுபோல, கல்வியைக் கற்கும்போது அதில் உள்ள விஷயங்களைப் புரிந்து கொண்டு
படிக்க வேண்டும். நாம் அளிக்கும் கல்வி மூலம் மாணவர்கள் நல்லவர்களாக வாழ
முடியும். அத்தகைய நல்ல கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
நாம் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதுடன்
பிறருக்கு உதவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது திறமை
மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் சீனிவாசன்
வரவேற்றார். மாணவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து
முதன்மை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், மேலாண்மைத் துறை டீன் ரமணகுமார்,
கல்வியியல் துறை டீன் மூர்த்தி ஆகியோர் பேசினர்.
தேசிய அளவிலான பொதுத் தேர்வு: இதைத் தொடர்ந்து, சங்கரா
பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயிலச் சேரும் மாணவர்களுக்காக தேசிய
அளவில் தகுதித் தேர்வை நடத்துவது என்றும், இதில் முதல் 500 இடங்களைப்
பிடிப்பவர்களுக்கு முதல் பருவத்துக்கான கல்விக் கட்டணம் பெறாமல் சேர்த்துக்
கொள்வது தொடர்பாகவும் அறிவிக்கை வெளியிட்டப்பட்டது.
இதற்காக பல்கலைக்கழக இணையதளத்தில் மார்ச் 31-ஆம் தேதி
வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் மே 5-ஆம் தேதி
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








