இந்திய தேசிய ராணுவத் தலைவர் நேதாஜி சுபாஷ்
சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்குமாறு
உத்தரவிடக் கோரிய மனு குறித்து, 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என
மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, பொதுநல வழக்குகளுக்கான
தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த
மனுவில், நேதாஜியின் தியாகங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு பாரத ரத்னா
விருது அளிக்க வேண்டும், அவருக்கு மணிமண்டமும், அவரது வாழ்க்கை வரலாறு
குறித்த அருங்காட்சியகத்தை புது தில்லியிலும், மாநில தலைநகரங்களிலும்
அமைக்கவும், அவரது பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் அறிவிக்க
வேண்டும் என கோரியிருந்தார்.
இதுகுறித்து 8 வாரங்களுக்குள் மத்திய அரசு
பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,
எஸ்.விமலா ஆகியோர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...