பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான கேள்விகளும், பாடங்களின்
உள்பகுதியிலிருந்தும் புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள்
அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
அரசின் குறைந்தபட்ச
தேர்ச்சி கையேட்டை மட்டுமே நம்பி படித்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள், சில
தேர்வுகளில், அதிலுள்ள கேள்விகள் இடம் பெறாததால், குழப்பமடைந்து உள்ளனர்.
அந்த புத்தகத்தை, இனி வரும் தேர்வுக்கு படிக்கவா, வேண்டாமா என்றும்
சந்தேகமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:அரசு
வழங்கிய குறைந்தபட்ச தேர்ச்சி புத்தகத்துக்கும், தேர்வு வினா
தயாரிப்புக்கும் எந்த தொடர்புமில்லை. அதை படித்தால், குறைந்தபட்சம்
தேர்ச்சி பெறலாம் என, பல அரசு பள்ளிகளில் வழங்கினர்.குறைந்தபட்ச தேர்ச்சி
கையேடு, 2015 டிசம்பரில் தான் வெளியிடப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வுக்கான
வினாத்தாள்கள், அக்டோபரிலேயே இறுதி செய்யப்பட்டு விட்டன. இந்த வினாத்தாள்
தயாரிப்புக்கு பின்தான், குறைந்தபட்ச தேர்ச்சி கையேடுவழங்கப்பட்டது.
அதனால், வினாத்தாளுக்கும், இந்த கையேட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பாடப் புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் படித்து, இனி வரும்
தேர்வுகளிலாவது, நல்ல மதிப்பெண் பெற மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.
சொன்னது 'தினமலர்!
''பிளஸ் 2 தேர்வில்,
வினாத்தாள் கடினமாக இருக்கும். பாடங்களின் உள்பகுதியில் இருந்து, புதிய
கேள்விகள் இடம் பெறும்' என, கல்வி ஆண்டின் துவக்கம் முதலே, நமது நாளிதழில்
செய்தி வெளியிடப்பட்டது. அதுபோன்றே, தற்போது நடந்துள்ளது.மேலும்,
'குறைந்தபட்ச தேர்ச்சி கையேட்டுக்கும், பொதுத்தேர்வு வினாக்களும் தொடர்பு
இருக்காது' என, ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்தது குறித்தும், செய்தி
வெளியானது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...