ஓர் ஆண்டு படித்து ஒப்பற்ற சாதனை !தொடர்ந்து 100% தேர்ச்சி !!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்.இப் பள்ளி 2011-2012ஆம் கல்வி ஆண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி ஆகும்.2015-2016ஆம் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளியில் இருந்து 65மாணவர்கள் தேர்வு எழுதினர்,இவர்களில் 65 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.மற்றும் முதல் மதிப்பெண் 473 மதிப்பெண்களை பா.ஹரிஸ்குமார் என்ற மாணவன் பெற்றுள்ளான்.இவன் தமிழ்-91,ஆங்கிலம்-87,கணிதம்-100,அறிவியல்-98,சமூகவியல்-97 மொத்தம் 473.மேலும் இப்பள்ளியில் 3 மாணவர்கள்
கணிதத்தில் 100 மதிப்பெண்களும் சமூகவியலில் 4மாணவர்கள் 100மதிப்பெண்கள்
பெற்றுள்ளனர்.18மாணவர்கள் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
பெற்றுள்ளனர்.இந்த சாதனையை பாராட்டி தலைமை ஆசிரியர் திரு.கா.மணி மற்றும்
ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் மற்றும் மாவட்டக்
கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்கள் பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.சென்ற ஆண்டும் இப் பள்ளி 100% தேர்ச்சியும், 490 மதிப்பெண்கள் எஸ்.சிவக்குமார் என்ற மாணவன் பெற்று கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம் ஆனால் இனி இது
சாத்தியம்.அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அதை மெய்பிக்கும் வகையில் உள்ளது.இப் பள்ளி தொடந்து 100%தேர்ச்சி பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...