ாள்09ஜூன்201620:33தமிழகத்தில், ஜூன், 1ம் தேதி, அனைத்து அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகள்திறக்கப்பட்டன. அன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப்
புத்தகங்கள், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு
மட்டும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை; தனியார் பள்ளிகளுக்கும்
கிடைக்கவில்லை.
அதனால், கடைகளுக்கு
சென்று புத்தகங்கள் வாங்கி வருமாறு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தனியார்
பள்ளிகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், எந்த இடத்திலும்புத்தகம் கிடைக்கவில்லை.
கல்வித்துறை
அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஜூன், 15 முதல் புத்தகங்கள் வினியோகம்
செய்ய, பள்ளிக்கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.'அனைத்து
தாலுகா அலுவலகங்களிலும் செயல்படும் அரசு கேபிள், 'டிவி' நிறுவன இ - சேவை
மையங்களில், ஜூன், 15க்கு பின் புத்தகம், 'ஆர்டர்' செய்து வாங்கலாம்.
சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் பிளஸ் 1 புத்தகம் விற்க, இரண்டு சிறப்பு
கவுன்டர்கள் அமைக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.