ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது.
தெற்கு ரயில்வே மஸ்துார் சங்கம், தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம், தட்சிண
ரயில்வே ஊழியர் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள், வேலை
நிறுத்த நோட்டீசை, நேற்று காலை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட
ஜோரியிடம் அடுத்தடுத்து வழங்கினர்.
அடிப்படை
சம்பளம் உயர்வு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, தனியார் மயம் கூடாது என்பது
உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் ரயில்வே
ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்காக, நேற்று,
சென்னை, மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் பகுதியில் இருந்து, தெற்கு ரயில்வே
தலைமை அலுவலகத்துக்கு, 2,000 ஊழியர்களுடன் நேரில் சென்று நோட்டீசை
வழங்கினர்.இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் சங்க
பொதுச் செயலர் கண்ணையா கூறியதாவது:எங்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள்
பெரிய அளவில் பாதிப்படைவர். இதை மத்திய அரசுஉணர வேண்டும். மத்திய அரசுடன்,
ஐந்து முறை பேச்சு நடத்தியும் பயனில்லை. ஆகையால், திட்டமிட்டப்படி வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.