கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி ! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி !

கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.கோவையில், 520 கோடி ரூபாய் செலவில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டது. இதை, ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளை நடத்த முடியாமல் திணறி வரும் மத்திய தொழிலாளர் நலத்துறை, கோவை மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, தமிழக அரசு முறையாக விண்ணப்பித்தது.
ஆய்வு செய்த, எம்.சி.ஐ., பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அனுமதி தர மறுத்தது. குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:கோவை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100 மாணவர்களைச் சேர்க்க, எம்.சி.ஐ., அனுமதி அளித்து உள்ளது. இதில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும்; 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும்; 20 இடங்கள், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் சேர்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

21வது அரசு கல்லுாரி:தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் அனுமதி பெற்ற, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்கிறது.

ஏற்கனவே, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,665 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், 155 இடங்களில், ஐந்து இடங்களை இந்த ஆண்டு, எம்.சி.ஐ., குறைத்ததால் மொத்தம், 2,660 இடங்கள் உள்ளன. கோவை கல்லுாரியின், 100 இடங்களையும் சேர்த்தால், அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,760 ஆக உயர்ந்துள்ளது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H