காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்வு: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 26 July 2016

காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்வு: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 2-ஆம் கட்ட கலந்தாய்வில் 227 இடங்கள் நிரம்பியுள்ளன.வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 2,260 இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இந்தக் கலந்தாய்வுக்கு 5,757 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2,122 பேர் பங்கேற்றனர். இதில், 2,055 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்திருந்தனர். கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற தொழிற்கல்விகான கலந்தாய்வில் 40 இடங்கள் நிரம்பின.முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் கல்லூரிகளில் 142 இடங்களும், பல்கலைக்கழகத்தில் எஸ்.டி.பிரிவினருக்கான 8 இடங்கள் உள்ளிட்ட 15 இடங்களும் காலியாக இருந்தன. சேர்க்கைக்கான உத்தரவைப் பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேருவதற்கு ஜூலை16-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற 2 ஆயிரம் மாணவர்களில் சுமார் 800 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. இந்த ஆண்டு முதல் முறையாக அதிகப்படியான மாணவர்கள் வேளாண் படிப்புகளில் இருந்து விலகி வேறு படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர். வேளாண் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல், சுமார் 320 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல், பல மாணவர்கள் பொறியியல் படிக்கவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிக்கவும் சென்றுவிட்டனர். இதனால், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில்697 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டிருந்ததில் 229 பேர் பங்கேற்றனர். இதில் 227 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர்.காலியிடங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக இருப்பதால் இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த வாரம் முழுவதும் நடைபெறும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H