வங்கியில் பணிகள்
சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட்/கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
1-8-2016-ந் தேதியில் 21 முதல் 28வயதுக்கு உட்பட்டவர்கள் கிளார்க் பணிகளுக்கும், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2016
இது பற்றிய விரிவான விவரங்களைwww.repcobank.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...