கோவாவில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யா மத்தியில் 50 பில்லியன் டாலர் அதாவது ரூ.33,000 கோடி மதிப்புடைய எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளது.
எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாங்கப்படும் ஏவுகணைகளை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சீனா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வைக்க இந்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
பிரிக்ஸ் மாநாடு முடிந்த உடன் பரிதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்-ஐ தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது.