தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் அறிவிக்கப்பட்டதன் அடிப்ப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வந்திருந்தன.. அவற்றுள் முதல் மூன்று இடம் பெற்ற படைப்பாளர்கள் விபரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது..
பள்ளி மாணவர்களுக்கான அன்புள்ள ஆசிரியருக்கு என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சமத்தூர் மாணவி நா.சுகப்பிரியா முதலிடத்தையும் ஈத்தாமொழி மாணவி பி.தங்கநிவேதா இரண்டாமிடத்தையும் சென்னை ஏ.எல்.ஹரிணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
நான் விரும்பும் வகுப்பறை என்ற தலைப்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கோவை மாவட்டம் சு.ம.யுவநிலக்வி முதலிடத்தையும் திருவள்ளூர் மாவட்டம் மோ.சுவாதி இரண்டாம் இடத்தையும் கன்னியாகுமரி மாவட்டம் எ.ஷாமினி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கானஎன்னைச் செதுக்கிய மாணவர்கள்என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் ஜவஹர் மாரியப்பன் அவர்கள் முதலிடத்தையும் தஞ்சை மாவட்டம் இரா.சிளாமளா தேவி இரண்டாம் இடத்தையும் திருப்பூர் மாவட்டம் ப.விசாலாட்சி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதில் மக்களின் பங்கு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் ஏ.கோ.வி.ஜி.ரவி முதல் இடத்தையும் சிவகங்கை மாவட்டம் சுல்தான் இரண்டாம் இடத்தையும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரா.மணிமேகலை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழகள் வழங்கப்படும்..
மேலும் விபரங்களுக்கு:வே.பாலமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2016, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அலைபேசி: 9488284512