தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....
இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"
'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'
"எப்பிடிப்பா கறக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டையறியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல எங்களால புரிஞ்சிக்க ஏழாமல் போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'
*'நம்ம ரெஸ்டுரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்பை அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம்.
*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட நம்ப உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.
'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்கட மனசில இருக்கம்னு அர்த்தம்'.
பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கம்'.
#வாழ்க்கை #குறுகியது, ஆனா #அழகானது.
படித்ததில் பிடித்தது...
[12:35 PM, 10/12/2016] +91 97885 37101: ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
எப்போதாவது இதைப்பற்றி சிந்தித்தது உண்டா?
இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?...
ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
தோராயமாக மூன்றரைக் கிலோ வேர்கடலை போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்....
ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....
அடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும்.
ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது...
இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது...?
இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!...
காரணம்...
இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது...
எல்லாம் கலப்படங்கள்...
எண்ணெய்களோ... தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில் தான்...
மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்) இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்...
இதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது...
இதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?...
உஷார் நண்பர்களே!...
இயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்...
இன்றைய பொருளியல் உலகில், நம் உடலியலை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்...
நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை உள்ளே அனுப்பி விட்டு, அவற்றை வெளியேற்ற அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறோம்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...
"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...
இயற்கை வேளாண்மையில் விளைந்த நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...
வாழ்க நலமுடன்...
Thanks : Laks Ganesha Moorthy








