தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை
தொடங்கிய நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த
தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை
பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அவ்வப்போது லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடதமிழகத்தில் சில இடங்களிலும் தென் தமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 8 செ.மீ. மழையும், தூத்துக்குடி,
தென்காசி, ஆர்.எஸ். மங்கலத்தில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.