முதலில் ஆர்வம் காட்டியது. இதை வெளிப்படையாக, பிப்.,15ம் தேதி அறிவித்தது. ஆனால், மற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்த விஷயத்தில் சற்று அலட்சியம் காட்ட, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டன. விற்பனையாகாமல் இருப்பில் இருந்த வாகனங்களை தள்ளி விட டீலர்கள், விலை தள்ளுபடி சலுகைகளை அறிவித்தன. இது ஓரளவுக்கு பலன் கொடுத்தது. வாகனங்களை வாங்க மக்கள் முட்டி மோத, ‛ஸ்டாக் இல்லை' என்ற பலகை வைக்கும் நிலைக்கு டீலர்கள் தள்ளப்பட்டனர்.
3. தற்போது பி.எஸ் - 3 வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பர்களின் நிலை என்ன?
பி.எஸ் - 3 வாகனங்களை ஏப்ரல், 1ம் தேதி முதல் விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என்று தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அத்தகைய வாகனங்களை சாலையில் ஓட்ட கூடாது என சொல்லவில்லை. எனவே, பி.எஸ் - 3 வாகனங்களை தாராளமாக எந்தவித சட்டசிக்கலும் இன்றி, சாலையில் ஓட்டிச் செல்லலாம்.
4. டீலர்கள் சில நாட்களுக்கு முன் அறிவித்த விலை தள்ளுபடி சலுகையை பயன்படுத்தி, பி.எஸ் - 3 வாகனங்களை வாங்கியவர்கள் நிலை என்ன?
இந்த வாகனங்களின் விற்பனை தேதி, வாகன கடன் வாங்கிய தேதி ஆகியவை, மார்ச், 31ம் தேதிக்குள்இருக்கும்படி பார்க்க வேண்டும். ஏப்ரல், 1ம் தேதி முதல் இவ்வகை வாகனங்கள் பதிவு இருக்காது. அப்படியும் மீறி வாங்குபவர்கள், கண்டிப்பாக வாகன பதிவு செய்யப்படும் என்ற உறுதியை டீலர்களிடம் இருந்து பெற வேண்டும்.
5. பி.எஸ் - 3 வாகனங்களை வைத்து இருப்பவர்கள் அவற்றை விற்பனை செய்ய என்ன செய்ய வேண்டும்?
பி.எஸ் - 3 வாகனங்களை பிறரிடம் இருந்து
6. பழைய வாகனங்கள் விற்பனையில் தற்போது ஏராளமான டீலர்கள், பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன?
பழைய கார் விற்பனையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. சுப்ரீம் கோர்ட் உத்தரவில், பழைய வாகன விற்பனை குறித்த தெளிவு இல்லை. இதில் தெளிவு ஏற்பட்ட பின், பழைய வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.
7. எதிர்காலத்தில் இப்பிரச்னை எப்படி போகும்?
மக்கள் இடபெயர்வு என்பது அதிகளவில் நடந்து வருகிறது. எனவே, பெருநகரங்களில் வாழ மக்கள் செல்வது அதிகரிக்கவே செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களால், புகை மாசு பிரச்னை அதிகரிக்க தான் செய்யும். எனவே, பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், ஹைபிரீடு வாகனங்கள் விற்பனையை அதிகரிக்க வேணடும். பி. எஸ் 6 விதிமுறைகள், 2020ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அந்த தொழில்நுட்பத்திற்கு உட்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்க வேண்டும்.








