இரு நாட் களுக்கு நடைபெறும் தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் கலந்துகொள்வதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதி காரிகள் தெரிவித்தனர்.சென்னையில் தாள்-1 தேர்வை 27 மையங்களில் 10 ஆயிரத்து 147 பேரும், தாள்-2 தேர்வை 88 மையங்களில் 31 ஆயிரத்து 235 பேரும் எழுதுவதாக மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்று போதிலும் தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வந்துவிடுமாறு விண் ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை விண்ணப் பதாரர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர் களிடம் ஏதேனும் பிட் பேப்பர் இருக்கிறதா, கால்குலேட்டர், செல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்ளனவா என்ப தெல்லாம்பரிசோதனையின்போது ஆய்வு செய்யப்படும். பரிசோதனை முடிவடைந்த பின்னரே அவர்கள் தேர்வுக் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும். தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போது விண்ணப்பதாரர்கள் விடைத்தாளின் நகலை (ஓஎம்ஆர் ஷீட் பிரதி) எடுத்துச்செல்லலாம். தகுதித்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








