இன்று நேற்று கிடையாது ஒரு போட்டியில் வெல்பவர் தான் திறமைசாலி என்ற எண்ணம் தொன்று தொட்டு நம் மனதில் பதிந்த ஒன்று.
இதை சரி செய்வதற்கு
முதலில் போட்டியிடும் களம் அனைவர்க்கும் சமமான சூழலில் இருக்க வேண்டும்
மனப்பாடம் செய்து ஒப்பித்தல் அல்லது எழுதுவது மட்டும் திறமை என்ற எண்ணம் ஆசிரியர் / பெற்றோர் /சமூகம் இவர்களிடம் இருந்து விலக வேண்டும்.
திறமை என்பது பழக்கத்தை வழக்கமாக மாற்றும் போது தான் என்றாவது ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்பதை நாம்ம் உணர வேண்டும்.
வெற்றி என்பது மதிப்பெண்களில் அடக்கி போவதில்லை.
உண்மையாக நம் உழைப்புக்கு கிடைத்த கூலி தான் மதிப்பெண் என்பதை உணர்ந்து, இனி நாம் திறமையை வெற்றியை நோக்கி செலுத்த எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.,
வெற்றி பெற்ற , வெற்றியை நோக்கி பயணிக்கும் அனைத்து மாணவர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.THANKS TO BALA..








