7 வது சம்பள கமிஷன்: வீட்டு வாடகை படியில் தாராளம்!

ஜூலை மாதம் முதல் நற்செய்தி
பல மாத காத்திருப்பிற்குப் பின்பு 52 லடசத்திற்கும் அதிகாமக
அரசு ஊழியர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ் வீட்டு
வாடகைப்படியுடன் வழங்கப்பட இருக்கின்றது. சம்பள உயர்வுக்குப் பிறகும்
இந்தக் கொடுப்பனுவுகள் தொடர்ந்து அப்படியே வழங்கப்படும்.
மத்திய அரசு வீட்டு வாடகைப் படியை தாராளமாக வழங்க இருக்கின்றது
புதுப்பிக்கப்பட்ட கொடுப்பனவுகளை விடுவிப்பதில் ஏற்பட்ட
தாமதத்தால் 2016 ஜனவரி 1 முதல் 40,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்குக்
கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு வீட்டு வாடகைப்படியை
தாரளமையமாக ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அளிக்க முடிவு செய்துள்ளது என்று
கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
நுகர்வு அதிகரிக்கும்
கொடுப்பனுவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உடன் நுகர்வு
அதிகரிக்கும் என்று அரசு நம்புகின்றது. சென்ற நிதி ஆண்டை விட 2017-2018
நிதி ஆண்டில் தனியார் ஊழியர்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனை இந்திய
ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துக்
காணப்படுகின்றது. பொருட்களின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் ஆர்பிஐ
வெளியிட்டுள்ள பணவீக்க கணிப்பில் முதல் அரையாண்டில் 2 முதல் 2.5 சதவீதமாகப்
பணவீக்கம் இருக்கும் என்றும், இதுவே இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 3.5
முதல் 4.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைப் படி
மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி ஊழியர்கள் இருக்கும்
நகரத்தைப் பொருத்து 30, 20 மற்றும் 10 சதவீதமாக வழங்கப்பட்டு வருகின்றது,
இதைக் குறைக்கக் கூடாது என்று ஊழியர்கள் சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன.
குழு பரிந்துரை அரசு முடிவு அதே நேரம் 7 வது சம்பள கமிஷன் பரிந்துறை குழு
24, 16 மற்றும் 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் அரசு
தாராளமாகவே அதைவிட அதிகமாகவே அளிக்க முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை கூட்டம்
திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமைச்சரவை
செயலாளருடன் கலைந்துறையாட இருப்பதாகவும் அதில் கொடுப்பனவுகள் குறித்து
விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இந்தக் கூட்டத்தில்
ஊழியர்கள் யூனியன் தலைவர் பக்கத்தில் இருந்து யார் கூட்டத்தில்
பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
தொடரும் சஸ்பென்ஸ்
வீட்டு வாடகைப் படி மீதான இந்தச் சஸ்பெஸ் இன்னும் ஒரு வார
காலம் வரை நீட்டிக்கும் என்று கூறப்படும் நிலையில் அமைச்சரின் இந்தக்
கூட்டத்தில் இது குறித்த விவாதம் முக்கியமாக நடைபெறும் என்றும் அதற்கான
கோப்புகள் தாயார் நிலையில் உள்ளன என்றும் செய்தி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் வீட்டு வாடகைப்
படி மற்றும் அடிப்படை சம்பளம் இரண்டு கோரிக்கைகள் குறித்துத் தான் அரசு
தரப்பில் இருந்து என்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் அல்லது 27 சதவீதம் அளிக்க
வேண்டும் ஒரு பக்கம் பரிந்துறை குழு வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில்
அமைச்சரவை ஊழியர்களின் கோரிக்கைப் படி அளிக்கவே முடிவு செய்துள்ளன. சம்பள
உயர்வு ஊழியர்களின் சம்பள உயர்வு 6வது சம்பள கமிஷன் போன்றே 187 முதல் 178
சதவீதம் வரை ஊழியர்கள் வசிக்கும் நகரத்தைப் பொருத்து அளிக்க முடிவு
செய்துள்ளது. எச்ஆர்ஏ உயர்ந்தால் என்ன ஆகும்? வீட்டு வாடகைப்படியை அரசு
இப்போது உள்ள 30, 20, 10 சதவீத அளவில் தொடர்ந்து அளிக்க முடிவு செய்தால்
சம்பள உயர்வு 157 முதல் 178 சதவீதம் உறுதியாகும்.