இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார்.
2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார்.
சென்னை மாணவர்: தமிழக அளவில் இரண்டாவது இடத்தை சென்னை மாணவர் கே.ஆதித்யா
பிரணவ் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 648 மதிப்பெண்ணும், அகில இந்திய
அளவில் 351-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவு குறித்து அவர்
கூறுகையில், ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வைக் காட்டிலும் நீட்
தேர்வு எளிதாகவே இருந்தது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வு
எழுதியதால், என்னுடைய தரவரிசை குறைந்துவிட்டது என்றார்.2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார்.
மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா ஸ்ரீனிவாசன் பிடித்துள்ளார். இவர் 646 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 391-ஆவது இடத்தையும், டி.ஆர்.ஜீவா என்ற மாணவர் 645 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 404-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...