அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில்
மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்
காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்ய
வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
செய்தியாளர்களிடம் கூறினார்.