சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்
என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற
பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்
ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு தடை விதித்தது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள்
கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
செங்கோட்டையன்,தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 2 குழுக்கள்
நியமக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என
தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாற்றம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு
நிறைவேற்றப்படும் என கூறினார்.
இதே போன்று தமிழகத்தில உள்ள பள்ளிகளில் 10 ஆயிரம் நவீன கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.