சென்னைப் பல்கலைக்கழகம் டூ கோபாலபுரம்... பயணத்தில் மோடி செய்த ‘திடீர்’ மாற்றம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சென்னைப் பல்கலைக்கழகம் டூ கோபாலபுரம்... பயணத்தில் மோடி செய்த ‘திடீர்’ மாற்றம்!

மோடி கருணாநிதி
சென்னைப் பயணத்தின் திடீர் திருப்பமாகத் தி.மு.. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் சென்னை  பயணத் திட்டத்தில் மு.கருணாநிதியைச் சந்திக்கும் நிகழ்ச்சி திடீரென்று சேர்க்கப்பட்டது. மோடி செய்த இந்த மாற்றம்  பா.., தி.மு.-வினருக்கு சர்ப்ரைஸ் ஆனது. இதனால், தி.மு.-வினர் உற்சாகமடைந்து கோபாலபுரத்தில் குவிய ஆரம்பித்துவிட்டனர். தன்னைப் பார்க்க வந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார் கருணாநிதி.
பிரதமர் நரேந்திர மோடி, ‘தினத்தந்திபவளவிழாவில் கலந்துகொள்ள தனி விமானத்தில் இன்று காலை சென்னை வந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள்குறித்து டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் உயர் அதிகாரிகள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தனது பயணத் திட்டத்தை வாங்கிப் பார்த்த மோடி, ‘‘சென்னையில் தி.மு. தலைவர் கருணாநிதியைப் பார்க்க வேண்டும்’’ என்று சொன்னார். இதையடுத்து, அந்தத் தகவலைத் தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலினிடம் உடனடியாகச் சொன்னார்கள். அவரும்அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் கோபாலபுரம் வருகையை இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழக பி.ஜே.பி. மேலிடப் பார்வையாளரான முரதளிதர் ராவ்  உறுதிசெய்தார்.
 மோடி ஸ்டாலின் கனிமொழி
இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த மோடியை விமான நிலையத்தில் தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அடையாறு .என்.எஸ் கடலோரப் பாதுகாப்புப் படை தளத்தில் இறங்கிய அவர், கார் மூலம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்தார். ‘தினத்தந்தி’  பவளவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மோடி, அந்த விழா முடிந்தவுடன் நண்பகல் 12 மணிக்குக் கோபாலபுரத்துக்குக் கருணாநிதியைப் பார்க்கக் காரில் புறப்பட்டார். பல்கலைக்கழகத்துக்கு வெளியே நின்றிருந்த பி.ஜே.பி. தொண்டர்கள் மோடியை வரவேற்றுக் கைகளை அசைத்ததோடு, தங்கள் கைகளில் இருந்த பி.ஜே.பி. கொடிகளை உயர்த்திக் காட்டியும் வரவேற்றனர்.

மோடி தயாளு அம்மாள்
இந்நிலையில், 12.15 மணிக்கு கோபாலபுரம் வந்தார் மோடி. வீட்டு வாசலில் நின்று தி.மு. செயல் தலைவர் மு..ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். கனிமொழி எம்.பி. சால்வை கொடுத்து பிரதமரை வரவேற்றார். தி.மு.. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், பி.ஜே.பி. தலைவர் தமிழிசை ஆகியோரும் அங்கு இருந்தனர். இந்த வரவேற்பு முடிந்தவுடன்,மோடியை கருணாநிதி இருக்கும் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார் ஸ்டாலின். அங்கு மோடியை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வரவேற்றார். தன்னுடைய சேரில் உட்கார்ந்து இருந்த கருணாநிதி கையைப் பிடித்து உடல்நலம் விசாரித்தார் மோடி. கருணாநிதி புன்னகைத்தார்.
கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளிடமும் உடல்நலம்குறித்து பிரதமர் கேட்டறிந்தார். பிரதமரின் வருகைகுறித்து கருணாநிதியிடம் எடுத்துச் சொன்னார் ஸ்டாலின். இந்த நலம் விசாரிப்பு சுமார் 10 நிமிடங்கள் நடந்தன. அப்போது, ‘முரசொலி’  பவளவிழா மலர், தாம் எழுதியகுறளோவியம்நூலின் ஆங்கிலப் பதிப்பு ஆகிய நூல்களைப் பிரதமர் மோடிக்கு கருணாநிதி பரிசாக வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் மோடியை மு..ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார். அதன்பிறகு, மோடி அங்கிருந்து கிளம்பினார். மோடியின் வருகையை முன்னிட்டுக் கோபாலபுரத்தில் ஏராளமான தி.மு.-வினர் திரண்டிருந்தனர்
கருணாநிதி

அந்தத் தொண்டர்களும் கருணாநிதியைப் பார்க்க ஆசைப்பட்டனர். ‘கலைஞர் வாழ்க’  என்று அவர்கள் அங்கு நின்றவாறு கோஷமிட்டுக்கொண்டு இருந்தனர். இதைக் கவனித்த ஸ்டாலின், மாடியில் இருந்த கருணாநிதியிடம் சொல்லி  அவரைக் கீழே அழைத்து வந்தார். வீட்டு வாசலில் வீல் சேரில் இருந்தவாறே தொண்டர்களைப் பார்த்துக் கையை உயர்த்தி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மோடியின் திடீர் வருகையும் தொண்டர்களைக் கருணாநிதி சந்தித்ததும் இன்று நடந்த சர்ப்ரைஸ். தி.மு.-வினருக்கு இன்றைய நாள் மறக்க முடியாத நாள் ஆக அமைந்துவிட்டது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H