டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் டோர் டெலிவரி திட்டத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீரென
ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை தமது ட்விட்டர் பக்கத்தில்
உறுதிபடுத்தியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசின் முக்கிய திட்டத்திற்கு
ஒப்புதல் அளித்துள்ளது ஒட்டு மொத்த டெல்லிவாசிகளுக்கும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் படி பயோமெட்ரிக்
மறையில் அடையாளத்தை உறுதி செய்த பின் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேஷன்
பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகிக்கப்படும்.
மேலும் திருமண பதிவு, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை பெற பயனாளிகள்
அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ் சுமார் 40
பொது சேவைகளை வழங்கிட அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக கெஜ்ரிவாலின் இந்த
டோர் டெலிவரி திட்டத்திற்கு கடந்த நவம்பரில் நடந்த அமைச்சரவையில் ஒப்புதல்
பெறப்பட்டது. டிசம்பரில் இதற்கான அறிவிப்புவெளியாகி, அரசாணை கோப்புகள் துணை
நிலை ஆளுநரிடம் சென்றன. ஆனால் அவர் அப்போது இத்திட்டத்தை நிராகரித்து
விட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...