எஸ்.சி. - எஸ்.டி. மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அளிக்கும்
திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதால் நாடு முழுவதும் 8 லட்சம் மாணவிகள்
பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
2008-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட
இத்திட்டத்தின் படி 8-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக
ரூ.3000 அளிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினை வரும் கல்வி ஆண்டு முதல் கைவிட மத்திய அரசு முடிவு
எடுத்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவிகள்
பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் மட்டும் 70,000 மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு
இருக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.