தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ நுழைவுப்படிப்பிற்கு நீட் தேர்வு உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் முறையும் இணையதளத்தின் மூலம் தொடங்கிவிட்டது.
இதனை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவர்களும் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் தமிழில் விண்ணப்பிக்கும் முறை வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் தற்காலிக இணையவசதி உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.








