
தவிர்க்க முடியாத காரணத்திற்காக 🚅ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், 💻முன்பதிவு செய்யப்பட்ட ரயில் 🎫டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம்🔈 அறிவித்துள்ளது. 🌎உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது👏. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து 💺இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை😟 என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய 🚉ரயில்வே அறிமுகம் செய்துள்ளது👍. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய 🚉ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை 💻முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்👍.
பயணி அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக ✍விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம்👍. இதே போல் பயணிகளும் 🚃ரயில் புறப்படுவதற்கு ⌚24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் 🎫டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை🙏 விடுக்கலாம். மாணவர்கள் பெயரில் 🏫பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட 🎫டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் ⌚48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம்😯. தேசிய 👥மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது🙂 என்பது குறிப்பிடத்தக்கது👍