💢⭕💢12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
💢⭕💢காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைசேர்ந்த 17 வயது சிறுமி, பாஜக எம்எல்ஏ உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
💢⭕💢இதன் படி 12 வயதுக்கு உட்பட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். 12 வயதிற்கு மேற்பட்ட16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கான சிறை தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கவும், ஆயுள் முழுக்க சிறை தண்டனை வரை நீட்டிக்கவும் அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
💢⭕💢பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்குவோர் முன்ஜாமீன் கோர முடியாது. மகளிருக்கு எதிராக பாலியல் கொடுமையில் ஈடுபடுவோருக்கு தண்டனை 7 ஆண்டில் இருந்து பத்தாண்டுகளாக அதிகரிப்படுகிறது. இந்த வழக்குகளில் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது விதிக்கப்படும்.
💢⭕💢16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பலாத்காரம் செய்தால் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.மேலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றங்களை ஏற்படுத்தவும், இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்கவும் அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள போக்சோ சட்டத்தில் இதற்கான திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
💢⭕💢இதே போன்று வங்கி மோசடிகளை தடுக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் உள்நாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்தவற்கான மசோதா கடந்த மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகள் அமளியால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், வங்கி மோசடிகளைத் தடுக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் நாடு திரும்பி விசாரணையை எதிர்கொள்வதற்கான அழுத்தம் ஏற்படுவதுடன், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும் GFX 2 OUT என மத்திய அரசு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...