'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வில், மதிப்பெண்ணில் சந்தேகம்
உள்ளவர்கள், விடைத்தாள் நகல் பெற வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி,
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல் முதல்,
scan.tndge.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விடைத்தாள் நகல்
பெற்றவர்கள், அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ
தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் உள்ள, விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 20 முதல், 22க்குள்,
முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...