இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனமான இஸ்ரோ மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை
வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பயிற்சி முகாமைt
நடத்துவதற்காகவும் 2 டிவி சேனல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில்
செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், "8 ஆம் வகுப்பு முதல் 10
ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக
இஸ்ரோ மாணவர்களின் திறன் வளர்க்கும் திட்டங்களை உருவாக்கும்" என்று
தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளி முகமை மாணவர்களைத்
தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 25 முதல் 30 நாட்கள் வரை பயிற்சி
அளிக்கப்படும். இந்த பயிற்சி காலங்களில் மாணவர்கள் தங்களுடைய சிறிய
செயற்கைகோள்களைத் தயாரிக்க ஆய்வகங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்"
என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் சென்றடையும் வகையில்
டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளது பற்றி கூறுகையில்,
நம்மிடம் அறிவியலுக்காக தனியாக டிவி சேனல் எதுவும் இல்லை. அதனால், இஸ்ரோ
தொடங்கும் டிவி மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் என்று கூறினார்.
விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய சிந்தனைகளுடன்t வருபவர்களுக்காக ஒரு
காப்பீட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது பற்றி இஸ்ரோ தலைவர்
சிவன் தெரிவித்தார். \
இது குறித்து சிவன் கூறுகையில், "நமக்கு புதிய விண்வெளி
சிந்தனையாளர்களுக்கான ஒரு காப்பீட்டு மையம் தேவை. இதில் எங்களுடைய நோக்கம்
சிறந்த அறிவு, சிறந்த ஆராய்ச்சி. இதில் ஏற்படும் வளர்ச்சியை
பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் ஈடுபடும் புதிய அறிவியலாளர்கள்
எங்களுடன் சேராமலே இஸ்ரோவுக்கு பங்களிப்பு செய்யலாம்" என்று
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...