ஸ்ரீராம்
இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் விழாவை
மிகச்சிறப்பாய் நடத்தி வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே
திருக்குறள் பேச்சுப்போட்டியினை நடத்தி வருகிறது. இக்கழகம் 11-08-2018
அன்று கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், மண்டல அளவில் நடத்திய
பேச்சுப்போட்டியில்,மூலத்துறை பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி
த.ஜீவஜோதிகா முதலிடத்தையும் இதே வகுப்பைச் சேர்ந்த சி.ஹேமா
மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் இப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட
மேலும் 3 மாணவ மாணவிகள் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். மேலும் முதலிடம் பெற்ற மாணவி ஜீவஜோதிகா மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கும் தேர்வாகி உள்ளான்.
பரிசு பெற்ற மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு மற்றும்
ராஜேந்திரன், பள்ளித்தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள்
திருமுருகன், மலர்விழி, ரவிக்குமார், அமுதா, அங்கையற்கண்ணி மற்றும்
பரமேஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.
(புகைப்படக்குறிப்பு : முதல் பரிசுக்கான கேடயத்தை சபர்பன் பள்ளி
தலைமையாசிரியையிடமிருந்து பெறும் மாணவிகள் ஜீவஜோதிகா மற்றும் ஹேமா, பரிசு
பெற்ற மாணவ மாணவிகளுடன் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் சக ஆசிரியர்கள்)
நன்றியுடன்,
ஜெ.திருமுருகன்,mob 9788334907
கணித பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மூலத்துறை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...