கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
917 – லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார்.
1661 – பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார்.
1666 – இலண்டனின் பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர்.
1697 – பிரெஞ்சுப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது.
1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.
1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: யோர்க்டவுன் முற்றுகையில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையிடம் சரணடைந்தது.
1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
1798 – பிரான்சில் இராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டது.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1839 – ஐக்கிய இராச்சியம் சீனாவின் சிங் அரசுக்கு எதிராக அபினிப் போரை ஆரம்பித்தது.
1880 – உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.
1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.[1]
1905 – உருசிய-சப்பானியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட்டின் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்சயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் செருமனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: லேன்சு நகரம் தேசியவாதிகளின் பிடியில் வீழ்ந்தது.
1938 – சிலியில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியை அடுத்து சரணடைந்த பாசிச தேசிய சோசலிச இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: எசுத்தோனியா முழுமையாக நாட்சி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1945 – பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது.
1957 – கியூபப் புரட்சி: புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசு கியூபாவின் சியென்புவேகோசு நகரில் எழுந்த கிளர்ச்சியை அடக்க அங்கு குண்டுகளை வீசியது.
1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ அதிகாரி வில்லியம் கலி 109 வியட்நாமியப் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1975 – சேக்ரமெண்டோ நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.
1977 – அமெரிக்கா வொயேஜர் 1 விண்கலத்தை ஏவியது.
1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இசுரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்தம் .








