இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,268 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
சென்னையை பொறுத்தவரை 248 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் மட்டும் 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும், அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.









