புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மற்றும் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப
உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு
ஏற்கனவே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பிளஸ்1
வகுப்புகளுக்கு பொதுதேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக பிளஸ் 1 மற்றும்
பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 1200 மதிப்பெண்களில் இருந்து 600 மதிப்பெண்களாக
குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக தரம்
உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் குறித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:2018-19ம் கல்வியாண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு
மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் மார்ச் மாதம்
நடக்க உள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதையொட்டி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை முதன்மைக்கல்வி
அலுவலர்கள் வாயிலாக அனுப்ப அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்
முதல்வர்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
அதில் பள்ளியின் பெயர், பள்ளியின் எண், கல்வி மாவட்டம், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள், அருகில் தேர்வு எழுத உள்ள பள்ளியின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
அதில் பள்ளியின் பெயர், பள்ளியின் எண், கல்வி மாவட்டம், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள், அருகில் தேர்வு எழுத உள்ள பள்ளியின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களை சேகரித்து தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு
அனுப்பி வைக்கப்படும். பின்னர் தேர்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை
தேர்வுத்துறை இயக்குனர் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...