புனே: பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு
அளிக்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில்
இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
பிறப்பித்து உள்ளது.


சட்டம்
பொருளாதாரத்தில்
பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10
சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா சமீபத்தில்
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு சமீபத்தில், ஜனாதிபதி
ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்டம் ஆகியுள்ளது.
சுற்றறிக்கை
இந்நிலையில்,
புனேயில் நிருபர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய
அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, வரும் கல்வியாண்டில்
அமல்படுத்த வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று
சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இதனை அமல்படுத்த வேண்டும் என அனைத்து
மாநிலங்களையும் கேட்டு கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.