புனே: பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு
அளிக்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதாவை வரும் கல்வியாண்டில்
இருந்து அமல்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
பிறப்பித்து உள்ளது.
சட்டம்
பொருளாதாரத்தில்
பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10
சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா சமீபத்தில்
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு சமீபத்தில், ஜனாதிபதி
ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்டம் ஆகியுள்ளது.
சுற்றறிக்கை
இந்நிலையில்,
புனேயில் நிருபர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய
அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, வரும் கல்வியாண்டில்
அமல்படுத்த வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று
சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். இதனை அமல்படுத்த வேண்டும் என அனைத்து
மாநிலங்களையும் கேட்டு கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...