தமிழகத்தில் 102 புதிய பள்ளிக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ரூ.17.72 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடங்களையும், தருமபுரி, திண்டுக்கல்,
ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி,
திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்
ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்களையும்
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், அரியலூர், தருமபுரி,
திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர்,
திருச்சி, திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து
வைத்தார். மொத்தம், ரூ.157.19 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த 102 பள்ளிக்
கட்டடங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்
கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...